ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சித் துவையல்

Share this :
No comments

உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சியை துவையலாக செய்து உண்ணலாம்.

தேவையான பொருட்கள் :

மா இஞ்சி - 50 கிராம்,

சாதாரண இஞ்சி - 50 கிராம்,

புளி - பாதி எலுமிச்சை அளவு,

அச்சு வெல்லம் - 1,

உப்பு - தேவையான அளவு,

பச்சை மிளகாய் - 5,

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

செய்முறை :

* இஞ்சியைத் தோல் எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல மனம் வரும். அப்போது இறக்கி ஆற விடவும்.

* பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

* இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

No comments :

Post a Comment