அட, அது குஷி 2 இல்ல, அஜித் படம்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அப்படம் குஷி படத்தின் இரண்டாம் பாகம் என்றே அனைவரும் கருதினர்.
தமிழில் விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற குஷியை எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகாவை வைத்து இயக்கினார். படம் அங்கும் சூப்பர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் பவன் கல்யாணை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
எஸ்.ஜே.சூர்யா குஷி இரண்டாம் பாகத்தை விஜய்யை வைத்து இயக்க முயன்று, விஜய்யின் கால்ஷீட் கிடைக்காததால் அக்கதையை பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் என கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என இப்போது தெரிய வந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தையே தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாராம். தெலுங்குக்கும், பவன் கல்யாணின் இமேஜுக்கும் ஏற்ப சில மாறுதல்களுடன் வீரம் தெலுங்கு ரீமேக் தயாராகி வருகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment