இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை

Share this :
No comments


மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான அவசர சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையிழுத்திட்டார். இதன் மூலம் இந்த வருடம் மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவத்தை படிக்க நினைக்கும் மாணவ மாணவிகள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இதற்கான அவரசர சட்டம் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால், நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் சென்று பிரணாப்பிடம் விளக்கம் அளித்தார்.

அதையடுத்து, மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

எனவே தமிழகத்தில் இந்த வருடம் மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிளஸ்2 வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment